தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 23 மார்ச், 2025

தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு.

1002675893

மதுரை, சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 


இந்நிகழ்வில் சையது அபுதாஹிர், தில்ஷாத் பேகம் தலைமை தாங்கினார். இல்ல மேலாளர் கிரேசியஸ் முன்னிலை வகித்தார்.  சமூக ஆர்வலர்கள் செக் மஸ்தான் மற்றும்  நூருல்லாஹ்  தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின்  30 நபர்களுக்கு ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் பலசரக்கு மளிகை பொருள்களை வழங்கினர். இந்நிகழ்வில் இல்ல பயனாளிகள், பகுதி வாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அணி செயலாளர் ராவியத்  நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad