திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!
திண்டுக்கல் மணிக்கூண்டில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக இன்று12:3:25 நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில், திமுக தலைமைக் கழக பேச்சாளர் வயலூர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடுபோராடும் தமிழ்நாடுவெல்லும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது,
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் ஒரே இலக்கு என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது, இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ, பி, செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர்,இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக