தூத்துக்குடி 4ம் கேட் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி விபத்து ஏற்படா வண்ணம் தடுக்கும் பொருட்டு, நேற்று (15.03.2025) அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்தியபாகம் போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் வள்ளிநாயகம் அப்பகுதியில் இருந்த மணலை மூடையில் அள்ளி பள்ளத்தில் கொட்டி சரி செய்தார்.
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்காமல் இருப்பதற்காக தாமாக முன்வந்து மனிதாபிமானத்துடன் செயல்பட்ட மேற்படி போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக