ஸ்ரீ வாரி மருத்துவமனை, லயன்ஸ் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாம்!
ராணிப்பேட்டை, மார்ச் 16 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் ஸ்ரீவாரி சிறப்பு மருத்துவமனை, நெமிலி லயன்ஸ் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு பொது மருத்து வமனை இணைந்து 16.03.2025 அன்று நெமிலி சிறப்பு மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது இம்முகாமில் இளைஞர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்
32 பேர் இரத்ததானம் வழங்கி முகாமினை சிறப்பித்தார்கள், கொடை யாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. நண்பர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முகாமில் பங்கேற்க செய்த அனைத்து சேவை உள்ளங்களுக்கும் லயன்ஸ் சங்கத்தினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக