அமைச்சரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு!
ராணிப்பேட்டை ,மார்ச் 27 -
ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களிடம், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய குழு பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் தனது பிறந்தநாள் முன்னிட்டு ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் எம்.சி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப் பாளர். பவானி வடிவேலு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், ஒன்றிய அவைத்தலைவர். புருஷோத்தமன், ஒன்றிய பொருளாளர். சங்கர், மற்றும் தமிழ்செல்வன், லட்சுமிபதி ஆகியோர் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக