நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் *உலக தண்ணீர்* தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக *குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின்* சார்பில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து பேச்சுப்போட்டி நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி *தலைமை ஆசிரியை கௌசல்யாமணி* தலைமை வகித்தார். *ஆசிரியர் கார்த்திகேயனி* அனைவரையும் வரவேற்று பேசினார்.
பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பேச்சு போட்டியில் பங்கேற்று *தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் சேமிப்பு* பற்றி பேசி தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். *சிறப்பு அழைப்பாளராக பள்ளிபாளையம் ஒன்றிய வானவில் மன்ற கருத்தாளர் குணசேகரன்* கலந்து கொண்டு போட்டிகளில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கினார்.
நிகழ்வில் *எக்ஸல் பொறியியல் கல்லூரி தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் நடராஜன், தளிர்விடும் பாரதம் சார்பில் சரண்யாபிரபு, பாலாஜி* மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிறைவாக பள்ளி *ஆசிரியை ஜாஸ்மின் ஸ்டார் லெட்* அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக