மானாமதுரையை அடுத்த எஸ். கரிசல்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 19 மார்ச், 2025

மானாமதுரையை அடுத்த எஸ். கரிசல்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது

 

IMG-20250318-WA0143

மானாமதுரையை அடுத்த எஸ். கரிசல்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மிளகனூர் பஞ்சாயத்து அன்னவாசல் குரூப் எஸ். கரிசல்குளம் கிராமத்தில் வேண்டுவோர்கு கேட்ட வரம் தரும் 'அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்' ஆலயத்தின் 47ஆம் ஆண்டு பங்குனி திருவிழா குரோதி வருடம் பங்குனி 15 ஆம் தேதி சனிக்கிழமை காப்பு கட்டுதல் விழாவோடு தொடங்கப்பெற்று தொடர்ந்து பூச்சொரிதல் விழா, மாவிளக்கு பூஜை, பால் அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், நெய்விளக்கு ஏற்றுதல், திருவிளக்கு பூஜை, பொங்கல் பூஜை மற்றும் பங்குனி 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முளைப்பாரி, அக்னிச்சட்டி, ஆயிரம் கண் பானை, கரும்பாலைத் தொட்டி கட்டுதல், வேல் குத்தி பெருந்திருவிழாவும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது. இத்திருவிழாவிற்கு மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பக்த கோடி பொதுமக்கள் குடும்பத்தாருடன் வருகை தந்து அம்மனின் அருளாசி பெற்று செல்லுமாறு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாகம், விழா கமிட்டி மற்றும் எஸ். கரிசல்குளம் கிராமத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad