அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மாசி திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றப்பட்டது.
பின்னர் கொடிமரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் 12-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
11-ம் திருநாளான 13-ந் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும் அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. மாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா. அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக