சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்துக்களின் வாழ்வுரிமை மற்றும் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 மார்ச், 2025

சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்துக்களின் வாழ்வுரிமை மற்றும் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் ஆட்சியரிடம் மனு.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ண குமார் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா திடல் ஊராட்சியில் புளி மூட்டு பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் தாவு விளை இசக்கி அம்மன் கோயில் பல வருடங்களாக உள்ளது. இதனை அழிக்க முயலும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்துக்களின் வாழ்வுரிமை மற்றும் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடபட்டி ருந்தது.

இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயராம் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் காளியப்பன் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா பொதுச் செயலாளர் கார்கில் மணிகண்டன் பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அட்வகேட் ரஜினிகாந்த் ஒன்றிய பொருளாளர் விஜய் மணி துணைத்தலைவர் மனோகரன் உள்ளாட்சி பிரிவு ஒன்றிய தலைவர் நாராயண மூர்த்தி செயலாளர் பார்த்திபன் மற்றும் ஊர்மக்கள் பெண்கள் என பலர் உடனிருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர், ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad