சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் குடும்பத்துடன் காரில் வந்த சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் என்கிற சாணக்கியனை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியா (35). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். சாணக்கியன் மீது சேலம் மாவட்டத்தில் கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் தற்போது
சாணக்கியா, அவரது மனைவி
சரண்யா ஆகிய இருவரும் திருப்பூரில்
உள்ள பெரிய பாளையம் பகுதியில்
குடியிருந்து வருகிறார்கள். மேலும்
இவர் இரு சக்கர மற்றும் நான்கு
சக்கர வாகனங்களுக்கு லோன் தரும்
நிதி நிறுவனம் ஒன்றினை நடத்தி
வருகிறார். இந்த நிலையில் சேலம்
மாவட்டம் அன்னதானப்பட்டியில்
உள்ள காவல் நிலையத்தில்
வழக்கு ஒன்றிக்காக கையெழுத்து
ஈடுவதற்காக சாணக்கியா,
அவரது மனைவி சரண்யா ஆகிய
இருவரும் சென்று விட்டு திருப்பூரை
நோக்கி அவர்களது காரில் வந்து
கொண்டிருந்தனர்.
அப்போது ஈரோடு அடுத்த நசியனூர் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது இவர்களது காரை பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் இவர்களது காரின் மீது மோதி நிறுத்தினர்.
காரை நிறுத்திய உடனே காரில் இருந்து இறங்கி மர்ம நபர்கள் ஜானை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஜான் இறந்து விட்டநிலையில் கொலை சம்பவத்தை தடுக்க சென்ற அவரது மனைவி சரண்யாவிற்கு கைகளில் வெட்டுப்பட்டத்தை தொடர்ந்து அவர் நசியனூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சடலத்தை கைப்பற்றிய சித்தோடு போலீசார் விசாரணை செய்து தப்பியோடிய மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக