வேலூர் , மார்ச் 23 -
வேலூர் மாவட்டம் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் நடைமுறை படுத்த கோருதல், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் முறை மீண்டும் வழங்க கோருதல் ஒப்பந்த ஊதியம் மதிப்பூதியம் தினக்கூலி முறையினை இரத்து செய்து அனைவருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிட கோருதல் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 23.03.2025 காலை 10.00 மணியள வில் மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத் தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.ஜாக்டோ ஜியோ பேரமைப் பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி,ஆ.ஜோசப்அன்னையா,எம்.ஜெயகாந்தன், ஜி.சீனிவாசன், சகேயு சத்யகுமார் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர் ஜாக்டோ ஜியோ பேரமைப் பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் அ.மா மாயவன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை யாற்றினார்.மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தொழிற்பயிற்சி பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் என் ரமேஷ், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் உருதுவழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ் வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் அக்ரி.இ.ராமன் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி கனினி ஆசிரியர் சங்க மாவட்ட மாநில செயலாளர் ஜி.கோபி, ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் எ.டி.அல்போன்ஸ்கிரி, தமிழ் நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஆர்.ஜெயக்குமார் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ்.செல்வகுமார், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் பெ.இளங்கோ மாவட்ட செயலாளர் க.குணசேகரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் பேருரையாற்றினர்.
நிறைவேற்று நிறைவேற்று தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேறற்று, பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்து, சரண் விடுப்பு முறை மீண்டும் நடைமுறைபடுத்து. சிறப்பு காலமுறை ஊதியம், ஒப்பந்த ஊதியம், தொகுப் பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி முறையினை இரத்து செய்து அனைவருக் கும் முறையான காலமுறை ஊதியம் வழங்கிடுக ஜாக்டோ ஜியோ 10 அம்ச கோரிக்கைகளை உடனடியான நிறைவேற்று என்ற கோஷங்களை எழுப்பினர்.
ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் நடைபெறக்கூடிய மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர் பா ரவி, தட்சணாமூர்த்தி, செ.நா.ஜனார்த்தனன் முன்னிலையில்ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக