தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் உடன்குடியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவ ஆனந்தி, திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏ பி ரமேஷ், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் ஆர் சுடலை, துணைச் செயலாளர் தோப்பூர் பெரு மகாராஜன்,
திருச்செந்தூர் நகர் மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், ரேவதி, சோமசுந்தரி , திமுக நிர்வாகிகள் கோட்டை ஜான், அயலாக் அணி டேனியல், சோடா ரவி, திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு சத்துணவு பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக