திருமங்கலத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
நாட்டில் போதைப்பொருள் புழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.இதில் பெரும்பாலும் இளைஞர்கள் குறிப்பாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த போதைபழக்கத்திற்க்கு ஆளாகி அவர்கள் ஒரு கட்டத்தில் கொலை செய்கின்றகட்டத்திற்கு அடிமையாக விட்டனர்.இப்பொழது பெண்களும் போதை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதை தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது சம்மந்தமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தணபாடியன் பாலிடெக்னிக் மற்றும் பி.டி.ஆர்.பொறியல் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இதில் போதைப்பொருள்களை ஒழிப்போம் என்று ஊர்வலமாக ராஜாஜி சிலையில் இருந்து தேவர் சிலை வரை சென்றனர்.இந்த ஊர்வலத்தில் பி.டி.ஆர்.பொறியல் கல்லூரி முதல்வர் P.திரேஷ்குமார், தனபாண்டியன் பாலிடெக்னிக் முதல்வர் Dr.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக