நீலகிரி மாவட்ட நேருயுவகேந்திரா அமைப்பின் சார்பில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நேருயுவகேந்திரா ரஞ்சித் தலைமைத் தாங்கினார். தமிழியக்கம் மாவட்ட செயலாளர் தமிழச்செம்மல் புலவர் இர.நாகராஜ் சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகம் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். நீலகரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ்ரமணா தியாகிகளின் திருஉருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி நிகழ்வினைத் துவக்கினார். இந்நிழ்வில் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. கால்பந்தாட்ட பயிற்சியாளர் இராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக