மதுரையில் தற்கொலை செய்ய முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 மார்ச், 2025

மதுரையில் தற்கொலை செய்ய முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர்

 

IMG_20250321_115331_228

மதுரையில் தற்கொலை செய்ய முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர்.



கடந்த 19.03.2025 அன்று மதுரை மாநகர திருப்பரங்குன்றம் மேம்பாலம் அருகே உள்ள இருப்பு பாதையில் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் அதிக கடன் பிரச்சினையால் மேம்பாலத்தில் இருந்து இருப்புப் பாதையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மதுரை நிலையூரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் குட்டி கமல் வயது 27 என்பவரை கவனித்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்த முயற்சித்தும் சாமர்த்தியமாக  அவரிடம் பேச்சுக்கொடுத்து திசைதிருப்பி லாவகமாக மடக்கி பிடித்து தற்கொலை முயற்சியில் இருந்து மீட்டு காப்பாற்றிய நற்செயலுக்காக திருப்பரங்குன்றம் போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்
ரமேஷ் மற்றும் மாட்டுத்தாவணி காவல் நிலைய தலைமை காவலர்  ஐயனார் செல்வம் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த லட்சுமணன் ஆகியோர்களை காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து  நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்வில் நுண்ணறிவு பிரிவு  உதவி ஆணையர்  பெத்துராஜ் மற்றும் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்
மதுரை வீரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad