பேரணாம்பட்டு , மார்ச் 7 -
வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள், பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் கள்ளசாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த எதிரி ஆசிர்வாதம் (வயது38) த/பெ.பழனி, எருக்கம்பட்டு, பேர்ணாம்பட்டு என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.மேலும், இதுபோன்ற தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக