திண்டுக்கல்லில் மரம் நடும் விழா!
திண்டுக்கல் மாவட்டம், மங்கலப்புள்ளி அருள்மிகு நரசிங்க பெருமாள் திருக்கோவிலில் மாசி பௌர்ணமியை முன்னிட்டு தளிர் மரம் நடும் நண்பர்கள் குழு சார்பாக திருக்கோவிலில் வளாகத்தில் 131 வகையான மரங்கள், 12 ராசி, 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரம் முறையாக வாஸ்து பூஜையுடன் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் தாடிக்கொம்பு அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, அபிராமி அம்மன் திருக்கோயில் அறங்காவலர்கள் வீரக்குமார், மலைச்சாமி, தளிர் மரம் நடும் நண்பர்கள் குழு சந்திரசேகர், திமுக பொருளாளர் மீடியா சரவணன், மணியம் அரவிந்தன், அர்ச்சகர் ரிஷிகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்,பி.கன்வர் பீர்மைதீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக