குளம் போல காட்சி அளிக்கும் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 1 மார்ச், 2025

குளம் போல காட்சி அளிக்கும் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம்.

இன்று மார்ச் 01, அன்று பெய்த மழையில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் குளம் போல காட்சி அளிக்கின்றது.

இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழையில் நனைந்து, மழையினால் ஏற்பட்ட குளத்தில் நடந்து சென்று பேருந்தில் ஏறினர்.

பல ஆண்டுகளாக பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து வரும் வேளையில், இந்த பேருந்து நிலையத்தையும் மழை நீர் வழிந்தோடும் படி சற்று சரி செய்து கொண்டால் மக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும் 

அதிகாரிகள் கவனிப்பர்களா? குலசேகரப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

- நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad