காட்பாடி அருகே வீட்டில் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை காவல்துறை விசாரணை!
காட்பாடி, மார்ச் 22 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா இவர் உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்கநகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜா காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக