சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி என் எஸ் எஸ் - திருப்பணி செட்டிகுளம் குளத்தை தூர்வாரி 500 செம்மரம் நட்டு முகாம் நிறைவு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 மார்ச், 2025

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி என் எஸ் எஸ் - திருப்பணி செட்டிகுளம் குளத்தை தூர்வாரி 500 செம்மரம் நட்டு முகாம் நிறைவு.

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பாக திருபணி செட்டிகுளம் பஞ்சாயத்தில் உள்ள திருப்பணி செட்டிகுளம் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நிறைவு விழா மற்றும் 500 செம்மரம் நடும் விழா நாட்டு நலப்பணி திட்டம் முகாம் சார்பில் நடைபெற்றது.

சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் சார்பாக திருப்பணி செட்டிகுளத்தில் நாட்டு நலப்பணி முகாம் சார்பாக திருப்பணி செட்டிகுளம் குளத்தை பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நிறைவு விழா மற்றும் 500 செம்மரம் நடும் விழா நடைபெற்றது. இதற்கு உதவியாக நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் சார்பாக பணி செய்வதற்கு உதவியாக பொக்லின் இயந்திரம் மூலம் தூர்வார பணி மற்றும் நாட்டு நல பணி மாணவர்களாக குலத்தை சுத்தம் செய்யப்பட்டது 

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் கே. ரவீந்திரன் சார்லஸ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஏரல் தாசில்தார் செல்வகுமார் மற்றும் ஶ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் மரக்கன்றுகளை நடுவதற்கு தொடங்கி வைத்தார் மற்றும் குளத்தை தூர்வாரதே செய்ததற்கு மாணவர்களை வாழ்த்துரை கூறினார்கள். 

திருப்பணி செட்டிகுளம் ஊராட்சி தலைவர் சுயம்புலிங்கம் முகாமை சிறப்புரையாற்றினார். மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பணியை செய்து வருகின்றனர் இந்த நிகழ்ச்சியை நாட்டு நல பணி திட்ட அலுவலர் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் சா.டென்னிசன் செய்திருந்தார். 

இந்த நிகழ்ச்சியில் கிராம அதிகாரி திரு பிரான்சிஸ் கட்டிடவியல் துறை தலைவர் ஜாக்சன் எஸ்தர் தங்கம், ஜெபசீலா அன்டோனி மனுவேல் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad