தாராபுரம் சாலையில் ₹10,1500 பணத்துடன் கிடந்த பர்சை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த அரசு பஸ் நடத்துனர்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு பஸ் நடத்துனூராக பணி செய்து வருபவர் சையது அப்துல் ஹக்கீம் இவர் தாராபுரம் அரசு போக்குவரத்து கிளையை சேர்ந்த நடத்துனர் இன்று (13.03.2025) இரவு 12:30 மணி அளவில் நடத்துனர் பணியை முடித்துவிட்டு கிளையில் இருந்து வீட்டுக்கு தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் செல்லும்போது ஒரு பேக் கீழே கிடந்துள்ளது அதை அவர் எடுத்துப் பார்த்தபோது பணம் 1,01,500 ரூபாய் இருந்துள்ளது அதை அவர் தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அவரது நேர்மையை தாராபுரம் கிளையில் உள்ள அனைத்து தொழிலாளர்கள், பொதுமக்கள் அவரை மனதாரப் பாராட்டுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக