குடியாத்தம் ,பிப் 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையம் பகுதியில் வசிப்பவர் கீர்த்திவாசன் வயது 77 த/ பெ வேணுகோபால் இவர் தனது வீட்டு அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிர்யிழந்து உள்ளார். தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் தீயணைப்பு துறை அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனர்
தகவல் அறிந்த குடியாத்தம் நகர காவல்
உதவி ஆய்வாளர் பத்மநாபன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக