பேராவூரணி அருகே சத்துணவு மைய சமையல் கூடம் அடிக்கல் நாட்டு விழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

பேராவூரணி அருகே சத்துணவு மைய சமையல் கூடம் அடிக்கல் நாட்டு விழா

 

IMG-20250225-WA0253

பேராவூரணி அருகே சத்துணவு மைய சமையல் கூடம் அடிக்கல் நாட்டு விழா 


பேராவூரணி, பிப்.25 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், கங்காதரபுரம் ஊராட்சி, விளக்கு வெட்டிக்காடு கிராமத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ரூபாய் 7.56 லட்சம் மதிப்பீட்டில், சத்துணவு மையத்திற்கு வைப்பறையுடன் கூடிய சமையல்கூடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில்  நடைபெற்றது. 


சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவருமான மு.கி.முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், நாகேந்திரன், ஒன்றியப் பொறியாளர் மணிமேகலை மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.


முதல்வர் மருந்தகம் சென்னையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலிக்காட்சி மூலம் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, பேராவூரணி நகரில், சேதுசாலை, முதன்மைச் சாலை, ஆவணம் சாலை மற்றும் கொண்டிக்குளம் ஆகிய இடங்களில் உள்ள முதல்வர் மருந்தகங்களில் சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். 


நிகழ்வுகளில், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், திமுக ஒன்றியச் செயலாளர்கள் பா.ராமநாதன், கோ.இளங்கோவன், திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஷாஜகான், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, மகளிர் அணி மாவட்டத் தலைவர் தீபலட்சுமி, கொண்டிகுளம் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad