குடியாத்தம் , பிப் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ரங்கசமுத்திரம் மதுரா, ரேணுகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 37) என்பவரின் மனைவி திவ்யா (வயது -29) என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக இன்று 02/02/2025 மாலை 5.00 மணியளவில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார். இவருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.மேற்படி நபருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது என்று தெரியவருகிறது தகவல் அறிந்தவுடன் கிராமிய போலீசார் . சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்விற்காக குடியாத்தம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக