கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது
இன்று 20.02.2025 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மணை வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள் 120 நபர்கள் அழைக்கப்பட்டு, 90 மாற்றுத்திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி. தலமையில்,அரசு எலும்பு முறிவு மருத்துவர் திரு.காமராஜ் , காது மூக்கு தொண்டை மருத்துவர் திரு.கணேஷ் ராஜா ,மன நல மருத்துவர் . திரு. பாக்யராஜ் கண் மருத்துவர் திருமதி காயத்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக