கன்னியாகுமரி கடற் பகுதியில் கள்ளக் கடலை எச்சரிக்கை.
கன்னியாகுமரி கடல் பகுதியான ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இன்று மதியம் 2:30 மணி முதல் இரவு 12 மணி வரை கடல் கொந்தளிப்பாக காணப்படும் என இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் மேலும் கன்னியாகுமரிக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் இதனால் மீனவர்கள் தங்களது படகு உள்ளிட்ட உபகரணங்களை கடற்கரையில் அல்லது துறைமுகங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக