தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கை குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்கள்
கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து இளைஞர்களை தீவிரமாக தேடி வந்தனர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பெயரில்
இளைஞர்களை கைது செய்ய வீரவாஞ்சி நகர் மலைப்பகுதிக்கு சென்ற போலீசார் சென்றனர் அப்போது
தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்ததில் இளைஞர் மாரியப்பனுக்கு கை கால் முறிவு ஏற்பட்டுள்ளது மற்றொரு இளைஞர் மாரி செல்வத்தை தீவிரமாக தேடி வந்தனர்
தற்போது மாரி செல்வத்தை தீவிரமாக தேடி வந்தனர். போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் புதுக்கோட்டை பகுதியில் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் மாரி செல்வத்தை கண்டுபிடித்தனர்.
போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி செல்ல முயற்சி செய்தார். அப்போது போலீசார் மாரி செல்வத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அவருக்கு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக