மானாமதுரை பழைய பேருந்து நிலைய ரயில்வே கேட் சாலையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முன்னிலையில் பேரிகார்ட் அமைக்கப்பட்டது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவம் நிலையில் மானாமதுரை போக்குவரத்து காவல்துறை சார்பாக போக்குவரத்து இடையூறுகளை சரி செய்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மானாமதுரை போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் அவர்களின் முன்னிலையில் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே கேட் சாலையின் நடுவே பேரிகார்ட் அமைக்கப்பட்டது. இதில் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக