தூத்துக்குடியில் கண் பரிசோதனை முகாமை துவக்கிவைத்தார் அமைச்சர் கீதாஜீவன். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 10 பிப்ரவரி, 2025

தூத்துக்குடியில் கண் பரிசோதனை முகாமை துவக்கிவைத்தார் அமைச்சர் கீதாஜீவன்.

தூத்துக்குடியில் கண் பரிசோதனை முகாமை துவக்கிவைத்தார் அமைச்சர் கீதாஜீவன்.

தூத்துக்குடியில் என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியில் உள்ள SCAD திட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இம்முகாமில் கண்புரை சிகிச்சை, கண் கண்ணாடி பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு அது தொடர்பான மருந்துகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் என்டிபிஎல் தலைமை செயல் அலுவலர் அனந்த ராமானுஜம், கூடுதல் பொது மேலாளர் (HR) சரவணன், கூடுதல் முதன்மை மேலாளர்கள் ரகுபதி, சங்கர், அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அனிதா, மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், 

துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அன்பழகன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டச் செயலாளர் மூக்கையா, மாமன்ற உறுப்பினர் வைதேகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad