பேரணாம்பட்டு, பிப் 14 -
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா. மதிவாணன் உத்தரவின் பேரில், இன்று 14.02.2025-ம் தேதி, குடியாத்தம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், மதுவிலக்கு தொடர்பாக அறவற்றிலா பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிரி தனுஷ் (வ/22), த/பெ. சங்கர், கோட்டை காலனி, பேர்ணாம்பட்டு என்பவர், சட்டவி ரோதமாக வைத்திருந்த 0.200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சின்னதுரை தலைமை யிலான போலீசார் பேரணாம்பட்டு பகுதியில் சோதனை மேற்கொண்டு 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் தலைமையிலான போலீசார் பேரணாம்பட்டை சுற்றியுள்ள அரவட்லா சந்திப்பு, பத்தலபள்ளி சோதனை சாவடி, கோட்டை காலனி பகுதி மற்றும் வீக்காட்டார் ரோடு பகுதியில் சோதனை மேற்கொண்டு, சட்ட விரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 265 தமிழ்நாடு மற்றும் வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எதிரிகள் மீது 4 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
திருவலம் காவல் உதவி ஆய்வாளர் தேவபிரசாத் தலைமையிலான போலீசார் திருவலம் குகையநல்லூர் பகுதியில் சோதனை மேற்கொண்டு 33 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு எதில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மொத்தமாக மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட சோதனையில் சோதனையில், 326 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எதிரிகள் மீது 06 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார் எனபதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக