வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளி மாணவிகளிடம் ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் கைது - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளி மாணவிகளிடம் ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் கைது

 

IMG-20250226-WA0119

வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளி மாணவிகளிடம் ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் கைது. புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை.


வாணியம்பாடி,பிப்.26 - திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட மலை ரெட்டியூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.


இப்பள்ளியில் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் அங்குள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் தங்கி ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.


இவர் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற கம்ப்யூட்டர் தேர்வின் போது 7ஆம் வகுப்பு படிக்கக்கூடிய 6 மாணவிகளிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையம் என் 1098 மூலமாக புகார் தெரிவித்துள்ளனர்.


அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மேத்யூ அப்பகுதிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட 6 மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் கொடுத்த எழுத்துப்பூர்வமான புகாரை பெற்று வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.


புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் அன்பரசி( பொறுப்பு) தலைமையிலான போலீசார் அப்பகுதிக்குச் சென்று பிரபுவை  கைது அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


மாணவிகளிடம் அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad