கூடலூர் தாலுகாவிற்கு புதிய வணிகர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
நீலகிரி மாவட்டம்கூடலூர் தாலுகாவிற்கு புதியதாக வணிகர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்று கொண்டனர்.புதியதாக பதவி ஏற்ற சங்க நிர்வாகிகளை தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா தலைமையேற்று உறுதிமொழி உடன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தை சார்ந்த அனைத்து தாலுகா வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மேலும் நீலகிரி மாவட்டத்தில் வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தீர்வு குறித்து விவாதிக்கப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா உறுதி அளித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக