ராணிப்பேட்டை , பிப் 22 -
ராணிப்பேட்டை மாவட்டம் மார்ச் 1 அன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செயற்குழு கூட்டம் நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர் பா.செ. நரசிம்மன், நெமிலி மேற்கு ஒன்றிய அவைத்தலைவர். பொன்னுரங்கம் அவர்களின் தலைமையில் நடைப் பெற்றது. இதில் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், பனப்பாக்கம் பேரூர் கழக செயலாளர். சீனிவாசன் ஆகியோர் கலந்துக்கொண்டு கிளைகழக செயலாளர்களுக்கு கிளைகழகங்கள் தோறும் கழக கொடி ஏற்றி நலத் திட்டங்கள் செய்திட ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள்,பேரூர் கிளைக்கழக செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக