குமரி மாவட்ட தலைநகரின் அவலம்
நாகர்கோவில் மாநகராட்சியின் பல நூறு பயணிகள் இரவும் பகலும் வந்து செல்லும் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தின் இலவச கழிப்பறை.
அரசு பேருந்து நிலையம், அருகில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்த கட்டண கழிப்பிடங்களை பூட்டி ஒரே நேரத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குறைவான வசதி கொண்ட இலவச கழிப்பிடத்தை மட்டுமே பயன்படுத்தவேண்டியுள்ளது. அதிலும், இருக்கும் கழிப்பறை பலமாதங்களாக கதவு இல்லாமலும், கழிப்பறைகளை பூட்டு போட்டும் வைத்துள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள் இதனை சரிசெய்து தருமாறு மாநகராட்சி நிர்வாகத்துக்கு பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக