தனிநபர் வருமான வரி வரம்பு உயர்வு சேமிக்கும் பழகத்திற்கு எதிரான முறைஆசிரியர் அரசு ஊதியம் பெறுவோர் குழப்பம் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை,! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 3 பிப்ரவரி, 2025

தனிநபர் வருமான வரி வரம்பு உயர்வு சேமிக்கும் பழகத்திற்கு எதிரான முறைஆசிரியர் அரசு ஊதியம் பெறுவோர் குழப்பம் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை,!



வேலூர் ,பிப் 3 -

வேலூர் மாவட்டம் தனிநபர் வருமான வரி வரம்பு உயர்வு சேமிக்கும் பழகத்திற்கு எதிரான முறை ஆசிரியர் அரசு ஊதியம் பெறுவோர் குழப்பம் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி வரம்பு உயர்வு தற்போது 12இலட்சமாக உயர்த்தப்படும்  என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது மேலும் பழைய வரிவிதிப்பு முறையில் 80சி பிரிவில் சேமிப்புக்கான கழிவுத்தொகை குறித்து அறிவிக்கப்படவில்லை இந்த அறிவிப்பு நடுத்தர மக்களிடையே சேமிக்கும் பழக்கத்திற்கு எதிராக உள்ளது.இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது.
இன்று பாராளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 2024-25 நிதியாண்டிலும் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில்  மாற்றங்கள் ஏற்படுத் தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த ஓன்பது ஆண்டுகளாக மாற்றப்படாத வருமான வரி உச்சவரம்பு, வரும் நிதியாண்டில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தாண்டும் உச்சவரம்பில்  12 இலட்சம் வரை வரி இல்லை என அறிவித்து விட்டு 12இலட்டம் பெறுவோருக்கு 10 சதவிகித வரி என அறிவித்திருப்பது மாத ஊதியம் பெறும் அனைவருக்கும் மிக பெருத்த குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் பழைய வரி விதிப்பு முறையில் வரி செலுத்திடும் முறை வரிவிகிதம் குறித்து அறிவிக்கப்படவில்லை  மாத ஊதியம் பெறும் அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  
கடந்த ஆண்டு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நிதியமைச் சகத்திற்கு நாங்கள் சமர்பித்த கோரிக்கை மனுவில்  வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுவான கழிவாக (Standard Deduction) குறைந்தபட்சம் ஆண்டிற்கு ரூபாய் ஐம்பதாயிரம் என திருத்தியமைக்க வேண்டும் என புதுதில்லியிலுள்ள நிதியமைச்சத்திற்கு சமர்பித்தோம்.  மேலும் 80சி பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழிவுத்தொகை ரூபாய் மூன்ற இலட்சமாக உயர்த்த கோரினோம்
ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட புதிய வரி விதிப்பில் புதிதாக இணைபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை.  புதிய வரி விதிப்பில் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்த அரசு முன்மொழிந்துள்ளது. புதிய வரி வரம்புகள்: ரூ 0-5 லட்சம் : 0%
ரூ5-8 லட்சம்: 5%
ரூ 8-12 லட்சம்: 10%
ரூ 12-16 லட்சம்: 15%
ரூ. 16-20 லட்சம்: 20%
ரூ. 24 லட்சத்துக்கு மேல்: 30%
இந்திய பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் சேமிக்கும் பழக்கத்திற்கு முற்றிலுமாக வாய்பு மறுக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு முனைமம், பிரதமரின் நிவாரண நிதி, முதலமைச்சரின் நிவாரண நிதி, அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் நிதிகளுக்கு வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ளும் நடைமுறை பழைய வரி விகித முறையில் உள்ளது.  ஆனால் இந்த முறை புதிய வரி முறையில் இல்லாததால் சேமிக்கும் பழக்கம் எதிராக உள்ளது.  மேலும் இந்த வருமான வரி விலக்கில் பெரும் சிக்கல் என்வென்றால் 12 இலட்சத்திற்கு மேல் 13 இலட்சம் வருமானம் உள்ளவர்கள் 15சதவிகித வரியை செலுத்த வேண்டும்   மேலும் பழைய வரி விதிப்பு முறையில் வரி செலுத்திடும் முறை வரிவிகிதம் குறித்து அறிவிக்கப்படவில்லை 
v    வீட்டு வாடகைப்படி, மருத்துவ படி, அகவிலைப்படி, மருத்துவ செலவினம் மீள பெறுதல் ஆகியவை மேற்கொள்ளும் செலவினங்களுக்காக தரப்படும் படி ஆகையால் இதனை வருமானமாக கருதாமல் செலவினமாக கருத வேண்டுகின்றோம்.
v  80C பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழிவுத்தொகை ரூபாய் 1.5 இலட்சத்திலிருந்து ரூபாய் மூன்று இலட்சமாக உயர்த்த வேண்டும்.
v  இந்திய மொத்த வருவாயில்(GDP)  6 சதவிகிதமும் மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவிகிதமும் பள்ளிக்கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்திட கோருகின்றோம்.
v  புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைபடுத்திட வேண்டுகின்றோம்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad