குடியாத்தம் , பிப் 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் நகர உதவி ஆய்வாளர் வீராசாமி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டி ருந்தனர் அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த லெனின் (வயது 22)த/ பெ ஆனந்தன் M M நகா் மாதனூர் மற்றும் சபரிநாதன் (வயது 24) த/ பெ மதிவாணன் M M நகா் மாதனூர் ஆகியோரை தடுத்த நிறுத்தி விசாரணை செய்ததில் அவர்கள் பல்வேறு இடங்களில் ஏழு இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் என்று தெரியவந்தது அவர்களிடம் இருந்த 7 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக