தாராபுரம் 6வதுவார்டில் குடிநீர் குழாய் அடைப்பு உடனடியாக சரி செய்து கொடுத்த கவுன்சிலர் முபாரக் அலி பொதுமக்கள் பாராட்டு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி 6வது வார்டு கவுன்சிலராக முபாரக் அலி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார் இவர் அந்த பகுதியில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் உடனுக்குடனே செய்து தருவதில் சிறந்து விளங்குபவர் இந்நிலையில் இன்று ஆறாவது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் அடைப்பு என்பதை அறிந்த கவுன்சிலர் முபாரக் அலி உடனடியாக பணியாளர்களை வைத்து அடைப்பை சரி செய்து மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கினார் இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து அவரின் செயலை பாராட்டி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக