திருநெல்வேலி மாநகரம் - பாளை போக்குவரத்து பிரிவிற்குட்பட்ட பகுதியில், முருகன்குறிச்சி சந்திப்பிலிருந்து மார்க்கெட் சந்திப்பு வரையிலும், சமாதானபுரம் சந்திப்பிலிருந்து நீதிமன்றம் சந்திப்பு வரையிலும்,
திருநெல்வேலி நெடுஞ்சாலைத்துறையினரால் 6 புதிய பெட்டிப்பாலம் கட்டும் பணி மாவட்ட வருகின்ற 01.03.2025-ம்தேதி முதல் 20.03.2025 வரை 20 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற இருப்பதால்,
இச்சாலைகளை பயன்படுத்தி வரும் இலகுரகவாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் கீழ்கண்ட பட்டியலின்படி மாற்றுப் பாதையைப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலி கே.டி.சி நகர் - சீனிவாசநகர் வழியாக சமாதானபுரம், பாளை பேருந்து நிலையம் செல்ல
திருநெல்வேலி கே.டி.சி நகர் - சீனிவாசநகர் வழியாக அரசு சிறப்பு மருத்துவமனை, ஹைகிரவுண்டு ரவுண்டானா வழியாக பாளை பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.என அறிவுறுத்தப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக