நெமிலி அருகே ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி பெ. வடிவேலு ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 6 பிப்ரவரி, 2025

நெமிலி அருகே ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி பெ. வடிவேலு ஆய்வு!



இராணிப்பேட்டை, பிப் 6 -
 மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் கிராமத்திலிருந்து முருங்கை வரை செல்லும் 3 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை, பழுதடைந்து மிக மோசமான நிலையில் இருந்தது. சித்தூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், பள்ளூர், முருங்கை, தக்கோலம், பரமேஸ்வர மங்கலம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் இதனை சீரமைத்து தரக்கோரி கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் (எம்.ஜி.எஸ்.எம்.டி) கீழ், ரூ.1.07 கோடி மதிப்பீட்டில், தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியினை தரமாகவும், விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரரையும், அதிகாரி களையும் வலியுறுத்தினார். அப்போது சேந்தமங்கலம் கிளை செயலாளர், சம்பந்தன், ராமு, ரோஷன், கோகுல் ஆகியோர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad