காட்பாடி ,ஜன 31 -
வேலூர் மாவட்டம் காட்பாடி சன் பீம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் மாணவ மாணவிக்கு சாலை விழிப்புணர் பற்றி பல்வேறு போட்டிகள் நடைபெற்றன அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார் .
வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளியில் இன்று (31.01.2025) நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவவர் செமணி மொழி, காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி, வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன். மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன். காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக