திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 22 ஜனவரி, 2025

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்.
 
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (22.01.2025) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் 19 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad