அரசு குழந்தைகள் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா வேலூர் சப்-கலெக்டர் ஆர்.பாலசுப்பிரமணியன் வாழ்த்து!
காட்பாடி , ஜன 12 -
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் காட்பாடி செங்குட்டையில் அமைந்துள்ள மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லத்தில் பொங்கல் விழா 11.01.2025 காலை 9.30 மணியளவில் சங்கத்தின் சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. இல்ல கண்காணிப்பாளர் கே.எ.சாந்தி வரவேற்று பேசினார்.
சங்கத்தின் தலைவரும் வேலூர் வருவாய் கோட்டாட்சியருமான சப்கலெக்டர் இரா.பாலசுப்பிரமணியன் அவர்கள் பொங்கல் விழாவினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது. இந்த இல்லத்தில் நான் பொங்கல் விழா கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் இங்குள்ள மாணவிகள் சிறப்பாக கல்வி பயின்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டுமென வாழ்த்துகிறன். இந்த தமிழர் திருநாள் சிறந்த நாளாக அமைய வாழ்த்துகிறேன் என்றார். பின்னர் இல்லத்தினை பார்வையிட்டார். மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கே.அன்பு, சித்ரா லோகநாதன், காட்பாடி பள்ளி கட்டிடக்குழு உறுப்பினர் ஜி.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
சங்கத்தின் அவை துணைத்தலைவர்கள் இரா.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, மற்றும் மேலாண்மைக்குழு உறப்பினர்கள் டாக்டர் வீ.தீனபந்து, எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், எ.ஶ்ரீதரன் ஜெயின், ஆர்.ராதா கிருஷ்ணன், பி.என்.ராமச்சந்திரன், டி.லிவிங்ஸ்டன்மோசஸ், பி.பழனியப்பன் கலைவாணி, எம்.கே.சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இல்ல வளாகத்தில் பொங்கல் வைத்து தமிழர் திருநாள்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இல்ல மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைபெற்றனர். மாணவிகளுக்கு வேலூர் சப்-கலெக்டர் ஆர்.பாலசுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.முடிவில் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக