நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் ஊரைத் தேடி காவல்துறை என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் உதகை காவல்துறை சார்பாக ஊரைத் தேடி காவல் என்ற தலைப்பில் உதகை காந்தல் பகுதியில் இன்று மாலை உதகை நகர துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நகர மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களும் காவலர் விஜயகுமார் அவர்களும் நகராட்சி உறுப்பினர் அபுதாஹிர் அவர்களும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு உங்கள் ஊரில் காவலர் என்ற பெயரில் கூட்டம் நடத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் எதுவாயினும் உடனடியாக தங்களுக்கு தெரிவிக்கும் படி எடுத்துக் கூறினர் மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் பற்றி புகார் தெரிவித்தனர் அதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் மேலும் காந்தல் பகுதியில் நீலகிரி மாவட்டசிசிடிவி கேமரா விரைவில் பொருத்துவதை பற்றி கூறினார்கள்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக