மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் ஜல்லிக்கட்டு காளை வாடிவாசல், கிராமிய இசைகள் ஒலிக்க பட்டு சேலை அணிந்து ஆயிரம் மாணவிகள் ஒன்று கூடி வள்ளி கும்மியுடன் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாட்டம் - வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் கலை கட்டியது பொங்கல் கொண்டாட்டம்.
நாளை மறுநாள் தமிழர் திருநாள் தை 1 ம் தேதி பொங்கல் தினம் கொண்டாடப்பட இருக்கிறது,
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் தினத்தை கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கி உள்ளன.
அதன் தொடர்ச்சியாக இன்று மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பொங்கல் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர் மாணவிகள் மற்றும் வேலம்மாள் பள்ளி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றினைத்து கொண்டாடிய "கிராமிய பொங்கல் விழா"
செங்கரும்பு சூழ கல் அடுப்பில் பித்தாளை யானை மினுமினுக்க பச்சரிசி பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடினர்.
விழாவில் தமிழர்களின் வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டை போற்றும் வகையில் மைதானத்தில் வளம் வந்த ஜல்லிக்கட்டு காளைகள்,
வாடிவாசல் பல்வேறு உள்பட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன,
அதேபோல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவிகள் பட்டு சேலை அணிந்து மைதானத்தில் வட்டமிட்டபடி நின்று பாரம்பரிய கிராமிய இசைகள் முழங்க பொங்கல் பாடல்கள் பாடி கும்மியடித்து பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சில மாணவிகள் உற்சாகமாக நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் தமிழர் மாண்பின் பெருமையை பறைசாற்றும் கோலப்போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாணவ மாணவிகள் ஜல்லிக்கட்டு காளை, விவசாயம் , பொங்கல் விழா அறுவடைத் திருவிழா போன்ற கோலங்களை வரைந்து தங்கள் கைவண்ணத்தை காட்டினர்.
பொங்கல் விழா பொங்கல் விழாவினை வேலம்மாள் கல்லூரி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் விக்னேஷ் ,முதன்மை நிர்வாக அலுவலர் மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மருத்துவக் கல்லூரி விழாவில் ஜல்லிக்கட்டு காளை கும்மி பாடல்போன்ற கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது மாணவ மாணவர்களிடையே புத்துணர்வையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக