வேலூர்,ஜன.22-
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா. மதிவாணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு நாள், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறைதீர்வு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் அளித்து வருகின்றனர். மேலும் வாரத்தில் அனைத்து வேலை நாட்களிலும் பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 22.01.2025-ம் தேதி நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்வு நாளில் 40 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் எஸ்.பாஸ்கரன் (தலைமையகம்), மற்றும் கே. அண்ணாதுரை (சைபர்கிரைம் பிரிவு) ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக