வாழ்வியலும் கல்வியும் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம்.
நீலகிரி மாவட்டம் தமிழியக்கம் மற்றும் நீலகிரி எஜிகேஷனல் டிரஸ்ட், அயனாவரம் எஜிகேஷனல் டிரஸ்ட் சார்பாக வாழ்வியலும் கல்வியும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் தானிஷ் அகமது தொழில்நுட்ப கல்லூரி சேர்க்கை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் முகமது ஜாபர் அனைவரையும் வரவேற்றார். ரமணா சுரேஷ் முன்னிலை வகித்தார். கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் புலவர் இர.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கம், கவியரங்கில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் பட்டது. தானிஷ் அகமது தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், முகமது இலியாஸ், சுதிர்,ரம்யா ஆகியோர் கலந்துக் கொண்டனர். தில்ஷத் நன்றி நவில, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீன தயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக