ஐ சி ஐ சி ஐ பவுண்டேஷன் சார்பில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தீவனத் தொட்டி வழங்கப்பட்டது
ஐசிஐசிஐ பவுண்டேஷன் -கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் திட்டம் (CSR) மூலம் நாமக்கல் மாவட்டம் மோகனூர், தொகுதியில் விவசாயம், மருத்துவம், கல்வி, சுற்றுசூழல், தொழில் சார்ந்த பயிற்சி, சிறு தொழில் தொடங்க மானியம் மற்றும் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக மோகனூர் தொகுதிக்கு உட்பட்ட, 12 பஞ்சாயத்து கிராமங்களில் உள்ள கால்நடை வளர்க்கும் 2000 விவசாயிகளுக்கு தீவனதொட்டி வழங்கும் நிகழ்வு வலையபட்டி சமுதாய மையத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வேளாண்துறை உதவி இயக்குநர் திருமதி. ஹேமா, வேளாண்மைதுறை துணை உதவி இயக்குநர் திரு. செந்தில் குமார் வேளாண்மைதுறை உதவி வேளாண்மை அலுவலர் திரு. தினேஷ்வரன் அட்மா வட்டார தொழில்நுட்ப மேளாளர் திருமதி. ராஜாத்தி வலையபட்டி ஊராட்சி மன்ற முன்னால் கவுன்சிலர் திரு. பிரபாகரன் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டேஷன் வளர்ச்சி அலுவலர் திரு. நவராஜா கலந்து கொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் பார்த்திபன் மற்றும் நாமக்கல் மாவட்ட தமிழர் குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக