மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 6 ஜனவரி, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

IMG-20250106-WA0002

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப. அவர்கள் தலைமையில்  (06.01.2025)நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது


பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும். அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதனடிப்படையில் இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று. வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை. உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 256 மனுக்கள் வரப்பெற்றன.


மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரைத் தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள் பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 13 மனுக்களைப் பெற்று. உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,700/- மதிப்பில்மொத்தம் ரூ.29,600/ மதிப்பிலான காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.


முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கன்னியாகுமரியில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் திருக்குறள் நெறி பரப்பும் தகைமையாளர் என திரு. சிவ. சொல்லரசு அவர்கள் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றதைத் தொடர்ந்து,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


அதேபோன்று, சேலம் மாவட்டம். மேட்டூர் வட்டத்தைச் சேர்ந்த கலை இளமணி முனைவர் ம.மோனிஷ் அவர்கள் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மேற்கத்திய நடனம் ஹிப் ஹாப் நடனம், அசைச் செம்மொழி நடனம் மற்றும் பொம்மை நடனம் உள்ளிட்ட பிரிவுகளில் நடனம் ஆடி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மேஜிக் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் மற்றும் விருதுகள் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப. தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி அமயில், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கணேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.அ.ஜெ. செந்தில் அரசன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் திருமதி சுகந்தி பரிமளம் உள்ளிட்ட அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad