வேளாண் பொறியியல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் கண் பரிசோதனை முகாம்!
வேலூர்,ஜன.9 -
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அலுவலகத்தில் வேலூர் வேளாண் பொறியியல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயல் பொறியாளர் பாஸ்கர், பயிற்சி வரதன் ஜி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக