சிவகங்கை மாவட்டம் வேலுநாச்சியாரின் பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆர் பெரிய கருப்பன் அவர்களால் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போரிட்ட முதல் வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழக அரசின் சார்பாக சிவகங்கை திமுக மாவட்ட செயலாளர் கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பெரிய கருப்பன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் மாங்குடி அவர்களும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் அவர்களும் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் அவர்களும் சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக